Friday 3rd of May 2024 06:38:09 AM GMT

LANGUAGE - TAMIL
.
அரசின் 'போர்ட் சிட்டி' சட்டமூலம் நீதிமன்றில் தோற்கடிக்கப்படும்! - சஜித் அதீத நம்பிக்கை!

அரசின் 'போர்ட் சிட்டி' சட்டமூலம் நீதிமன்றில் தோற்கடிக்கப்படும்! - சஜித் அதீத நம்பிக்கை!


"இலங்கையைப் பிளவுபடுத்தும் ஆபத்துள்ள கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் தோற்கடிக்கப்படும்."

- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பிரிவினைவாதத்தில் ஈடுபட அரசு முயற்சிக்கின்றது.

நாட்டின் குடிமக்களை மூன்றாம் வகுப்பு குடிமக்களாகக் கருத அனுமதிக்கும் மற்றும் நாட்டை வெளிநாட்டு சக்திகளுக்கு அடிமையாக மாற்றும் அரசின் போர்ட் சிட்டி திட்டத்துக்கு எதிர்க்கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கின்றது.

அரசின் இந்த முயற்சியைத் தோற்கடிக்க உயர்நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்க நடவடிக்கை எடுப்போம்.

நாட்டினுள் பிளவுகளை ஏற்படுத்தும் திட்டத்தையும் அதன் சட்ட கட்டமைப்பையும் நிராகரிக்க ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவத்தையும் பலத்தையும் வழங்கும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE